Friday, January 3, 2014

வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்

பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மூலிகைகள் என சிலவற்றை கூறலாம். இளமையாக அழகாக பார்ப்போரை கவரும் தன்மையைக் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மூலிகைகள்.இந்த மூலிகைகளுக்கு எடுத்துக்காட்டாக நன்னாரிக் கொடியைச் சொல்லலாம்.

நன்னாரிக் கொடியின் வேர்:

நன்னாரிக் கொடியில் முக்கியமானது வேர். இதை சேகரித்து முறைப்படி சுத்தம் செய்து சூரணமாக மாற்ற வேண்டும்.பின்னர் ஆவின் பாலோடு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் . இதனால்தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இதனுடன் சீரகம் , மல்லி சக்கரை கலந்து சாப்பிட்டால் மேகச்சூடு, நீர்க்கடுப்பு, மேக வெட்டை, வறட்டு இருமல், கண் வளையம், தேமல், படை ஆகியவைவிலகுகின்றன.

எட்டுவிதமான செய்கைகளை கொண்ட எட்டுவித மூலிகைகள் முதலில் நோயை தம்பணப்படுத்தி பரவவிடாமல் வசியபடுத்தி, மாராண மூலிகைகள் அக்கிருமிகளை அழித்து, பேதண மூலிகைகள் பேதப்படுத்தி வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிருந்து வெளியேற்றுகின்றன.

இதன்படி பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாரணம்,வித்வேசனம் , பேதணம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும்.

எட்டுவித மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்ட கர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் :

பத்தியம்

இந்திய வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான்மூலிகைகள். பத்தியம் இல்லாவிட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல், என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள் காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் எதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுகிபின்பு கடுக்காய் 10கிராம், 10 மிளகு, வைத்து கஷாயம் செய்து சாப்பிட, 1 அல்லது 2 தடவை பேதியாகும். இவ்வாறு 3 நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம். பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல், வெயிலில் உலாவுதல் கூடாது.

பச்சரிசி கஞ்சியும், பருப்பும் மட்டும்தான் உணவாக கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும் என்பதுவிதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.

3-வது காரணம்:

விதிகள் மாற்றப்படுகின்றன:

சரக்கு சுத்திகள்:

சுக்கு, மிளகு,திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.

“சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களைநீக்குவது” அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.

எல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்விட்டான்கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன. இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வியடைகின்றன.

இதே போல் வாய்விளங்கம்திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள்1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்புமூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும் விதி.

இப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கும் சென்றடைந்து, வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.

இன்று கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயைவிரட்டலாம்.

No comments:

Post a Comment